பேட்டிங் பக்கா...
இந்தியாவின் பேட்டிங் பக்காவாக இருக்கிறது.வலிமையாக இருக்கிறது. பாகிஸ்தானை விட சிறப்பாக உள்ளனர்.
சாம்பியன் மாதிரி விளையாடுறாங்களே...
இந்திய வீரர்கள் சாம்பியன் போல விளையாடுகிறார்கள். இறுதிப் போட்டிக்கும் இந்தியா போகும் என்றே கருதுகிறேன்.
சச்சின் இல்லாமல் சாதிப்பது பெரிய விஷயம்
சச்சின், டிராவிட், ஷேவாக், கம்பீர் என முக்கியமான வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்தியா சிறப்பாக ஆடுவது ஆச்சரியமானது, முக்கியமானது. பேட்டிங்தான் இந்தியாவின் பெரும் பலமாகும்.
சர்வசாதாரணமாக 300 அடிக்கிறார்கள்
இந்திய வீரர்கள் இங்கிலாந்து சூழலில் சர்வ சாதாரணமாக 300 ரன்களை அடிப்பது பெரிய விஷயம். இந்தியா வீரர்கள் சரளமாக விளையாடுகிறார்கள்.
2 போட்டிகளிலும் பிரில்லியன்ட்
முதல் இரு லீக் போட்டிகளிலும் இந்தியா பிரமாதமாக ஆடியது. ஷிகர் தவானும், ரவீந்திர ஜடேஜாவும் இந்தியாவின் முக்கியமான வீரர்களாக மாறியுள்ளனர்.
பாகிஸ்தானை விட இந்தியா பெட்டர்
தற்போதைய நிலையில் பேட்டிங்கைப் பொறுத்தவரை பாகிஸ்தானை விட இந்தியா சிறப்பாக உள்ளது. ஆனால் பாகிஸ்தான் கடைசி நேரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
பந்து வீச்சில் பாகிஸ்தான்தான் பெஸ்ட்
பந்து வீச்சில் பாகிஸ்தான் சிறப்பாக இருப்பதை மறந்து விடக் கூடாது என்றார் காதிர்.