ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் அபூர்வி சண்டேலா மற்றும் அயோனிகா பால் ஆகியோரின் பதக்க கனவு தகர்ந்தது.
பிரேசிலின் டி ஜெனிரோவில் 31-வது ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் அபூர்வி அயோனிகா மற்றும் பால்சண்டேலா ஆகியோர் பங்கேற்றனர்.
51 பேர் கலந்து கொண்ட தகுதிச் சுற்றில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வீராங்கனைகளும் நான்கு முறை சுட வேண்டும். இதில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள்.
அதன்படி நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனைகள் அபூர்வி சண்டேலா 411.6 புள்ளிகள் பெற்று 34-வது இடத்தையும், அயோனிகா பால் 407.0 புள்ளிகள் பெற்று 43-வது இடத்தையும் பிடித்தனர்.
சீன வீராங்கனை லீ டு 420.7 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்தார். இது ஒலிம்பிக் சாதனையாகும். ஜெர்மனி வீராங்கனை 420.3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும், ஈரான் வீராங்கனை 417.8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர். ரஷ்யா, அமெரிக்கா (2), குரோஷியா, சீனா வீராங்கனைகள் முறையே 4-வது இடம் முதல் 8-வது இடங்களை பிடித்தனர்.
தகுதிச் சுற்றோடு வெளியேறியதால் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் சுற்றில் இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்தது.