
209 நாடுகள் போட்டி
இந்த உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு, பிபாவில் பதிவு செய்துள்ள 209 நாடுகள் இடையே பல்வேறு கட்டங்களாக தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இதுவரை 30 அணிகள் தகுதி பெற்றுவிட்டன.

தகுதி ஆட்டத்தில் மோதல்
அவ்வாறு உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிப் பெறுவதற்கான போட்டியில், நான்கு முறை சாம்பியனான இத்தாலியும், ஸ்வீடன் அணிகளும் மோதின. தில் முதல் ஆட்டத்தில் ஸ்வீடன் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. நேற்று நடந்த ஆட்டத்தில் அதிக கோல் வித்தியாசத்தில் வென்றால், உலகக் கோப்பைக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் இத்தாலி களமிறங்கியது.

ஸ்வீடன் தகுதி பெற்றது
இத்தாலியின் மிலன் நகரில் நடந்த இந்த போட்டியைப் பார்க்க, 76 ஆயிரம் மக்கள் குவிந்திருந்தனர். மற்றவர்கள் டிவியின் முன் உட்கார்ந்திருந்தனர். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், இரு அணிகளும் கோலடிக்கவில்லை. போட்டி டிராவில் முடிந்தது. முதல் ஆட்டத்தில் வென்றதால், ஸ்வீடன் உலகக் கோப்பை போட்டிக்கு 30வது அணியாக தகுதிபெற்றது.

இத்தாலியில் சோகமயம்
போட்டி முடிந்ததும், இத்தாலி வீரர்கள், மைதானத்தில் உறைந்து போய்விட்டனர். ரசிகர்களும், டிவியில் போட்டியை பார்த்தவர்களும், அதிர்ச்சியில் ஆழந்தனர். இத்தாலி முழுவதும் சோகமயமாகவே காட்சியளித்தது.

60 ஆண்டுகளுக்குப் பிறகு..
1934, 1938,1982, 2006ல் உலகக் கோப்பையை வென்ற, உலக கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் இத்தாலி, 60 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகக் கோப்பை போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 1958ல் ஸ்வீடனில் நடந்த உலகக் கோப்பைக்கு இத்தாலி தகுதி பெறவில்லை. தற்போது, ஸ்வீடனிடம் தோற்றதால், அடுத்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை.


Click it and Unblock the Notifications











