மதியுங்கள்
எங்களுக்கும் கொஞ்சமாவது அங்கீகாரம், மதிப்பு, மரியாதை தேவை என்று நான் கருதுகிறேன்.
இதுக்கு எதுக்கு வரப் போறோம்
எங்களுக்குப் பணம் தேவையில்லை. அப்படி நினைத்திருந்தால் வேறு விளையாட்டை தேர்ந்தெடுத்திருப்போம். எதற்காக ஸ்குவாஷையும், பேட்மிண்டனையும் விளையாடப் போகிறோம்.
சாம்பியனாவதா முக்கியம்
ஒரு தேசிய சாம்பியானவதற்கே இங்கு நூறு விதமான போராட்டங்களை நாங்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இதில் சர்வதேச சாம்பியன் பட்டத்தைப் பற்றியெல்லாம் எங்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
சீனாவைப் பாருங்கள்
சீனாவில் ஒருவர் பேட்மிண்டன் ராக்கெட்டைத் தூக்கிய நாளிலிருந்தே அரசு ஊக்குவிக்க ஆரம்பித்து விடுகிறது. அந்த வீரருக்கும், வீராங்கனைக்கும் என்ன தேவையோ அதை முழுமையாக தருகிறார்கள். அரசு பார்த்துக் கொள்கிறது.
இங்கு எத்தனை பேர்..
ஆனால் இங்கு பாருங்கள். நான், சாய்னா நேஹ்வால், சிந்து.. இவர்களைத் தாண்டி யாருமே இல்லையே... நம்மிடம் ஒரு பத்து பேர் கூடவா இல்லாமல் போய் விட்டோம்.. ஏன் இந்த அவல நிலை.
பணமெல்லாம் எங்கே போகிறது
அரசு பேட்மிண்டன் சங்கத்திற்கு நிறைய நிதி கொடுப்பதாக நான் கேள்விப்படுகிறேன். ஆனால் பணமெல்லாம் எங்கே போகிறது என்றுதான் தெரியவில்லை.
கிரிக்கெட்டைப் போலவே
கிரிக்கெட்டுக்குத் தரப்படும் முக்கியத்துவம், கவனிப்பு பிற விளையாட்டுக்களுக்கும் கிடைக்க வேண்டும்.
பிசிசிஐயைப் பார்த்து திருந்துங்க
இந்திய கிரிக்கெட் வாரியம், 12 நாடுகளில் கிரிக்கெட்டை பிரமாதமாக வளர்த்துள்ளது. அதைப் பார்த்து பிற விளையாட்டு அமைப்புகளும் திருந்த வேண்டும், பாடம் கற்க வேண்டும் என்றார் ஜுவாலா கட்டா.