நாங்க ரெடி
இந்திய அணி தனது அனுபவம் வாய்ந்த வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னோ போன்றோரை வரவழைத்துள்ளது. அவர்களைச் சமாளிக்க நாங்களும் தயாராக இருக்கிறோம்.
அனைத்தையும் பரீட்சீப்போம்
விரைவில் உலகக் கோப்பைப் போட்டி வருகிறது. எனவே அனைத்தையும் பரீட்சித்துப் பார்க்க இந்தியா விரும்புகிறது. நாங்களும் அப்படியே. அனைத்து வாய்ப்புகளையும் அலசி ஆராய்ந்து திட்டமிடுவோம்.
தனித் தனி பிளான்
யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்களை சமாளிக்கத் தனித் தனித் திட்டமிடப்படும். இது முக்கியமானது. இவர்கள் சிறப்பாக ஆடக் கூடியவர்கள்.
அடித்து ஆடாதவரை
இவர்கள் அடித்து ஆடாதவரை நல்லது. அடிக்க ஆரம்பித்து விட்டால் நிறுத்துவது கஷ்டம். அதற்குள் இவர்களை அவுட்டாக்க முயற்சிப்போம்.
அனுபவமும், இளமையும்
ஒரு அணியில் அனுபவஸ்தர்கள் இருந்தால் தானாகவே ஒரு அமைதி வந்து விடும். அதேசமயம், இளைஞர்கள் அதிகம் இருந்தால் ஒரு வித பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும்.
ஆஸி பேட்டிங்
ஆஸ்திரேலிய அணியில் நல்ல வீரர்கள் பலர் உள்ளனர். பல சிறந்த வீரர்கள் வெளியில் உள்ளனர். சிலருக்கு உள்ளே வர வாய்ப்பு கிடைத்துள்ளது. வேறு எங்கும் இப்படிப் பார்க்க முடியாது.
புதியவர்கள் அருமையானவர்கள்
சில புதியவர்கள் அணிக்கு வந்துள்ளனர். அவர்கள் அருமையானவர்கள். நிறைய தூரம் போக வேண்டியவர்கள். அவர்கள் நல்ல பீல்டர்களாகவும் உள்ளனர். டிரவிஸ் ஹெட் சிறப்பாக பேட் செய்யக் கூடியவர். கிறிஸ் லின் இருக்கிறார் என்றார் பின்ச்.