டெல்லி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க மண்ணில், ஒரே நேரத்தில் இரண்டு தொடர்களை வென்ற புதிய சாதனையை, இரண்டு இந்திய அணிகளும் புரிந்துள்ளன.
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளன. ஆடவர் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதே நேரத்தில் 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 5-1 என, முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை வென்றது.