அலஸ்டர் குக் நிலை
நேற்று தன் கடைசி இன்னிங்க்ஸில் ஆடி வந்த அலஸ்டர் குக், அரைசதம் அடித்து நிதானமாக ஆடி வந்தார். முதல் இன்னிங்க்ஸிலும் அரைசதம் அடித்து இருந்தார். இந்த முறை அரைசதத்தை சதமாக மாற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குக் 96 ரன்கள் அடித்து ஆடி வந்தார். மொத்த அரங்கமும் அவர் எப்போது சதம் அடிப்பார் என ஆவலோடு காத்திருந்தது.
ஒன்று ஐந்தானது
அலஸ்டர் குக் அப்போது பந்தை தட்டி விட்டு ஒரு ரன் எடுக்க ஓடினார். அப்போது, பந்தை பிடித்த பும்ரா வேகமாக வீசினார். ஆனால், பந்து ஆளில்லாத பகுதியில் ஓடி, பவுண்டரியை அடைந்தது. ஜடேஜா பந்தை பிடிக்க முயன்றாலும், அவர் அதிக தூர இடைவெளியில் இருந்ததால், குக் பவுண்டரி செல்லும் முன்பே கொண்டாட துவங்கிவிட்டார். 96 ரன்களில் இருந்து ஒரு ரன் ஓடப் போன குக், இப்போது 5 ரன்கள் பெற்றார்.
பும்ராவுக்கு நன்றி
இது பற்றி பேசிய குக், "அவர் செய்த ஓவர்த்ரோ என் நெஞ்சுவலியை குறைத்துவிட்டது. பும்ரா கூட இந்த தொடரில் எனக்கு நிறைய நெஞ்சு வலியை கொடுத்தார். ஆனால், நேற்று அந்த சில கணங்களை எனக்காக அவர் கொடுத்தார். அவருக்கு என் நன்றிகள்" என கூறினார்.
தடுமாறும் இந்தியா
இந்தியா தற்போது 400 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டியுள்ளது. 58 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தவித்து வரும் இந்திய அணி, இன்னும் ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ளதால், வெற்றி பெறுவது மிக மிக கடினம் என்றே கருதப்படுகிறது.