பாபர் அசாம் 30
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ரிஸ்வான் 14 ரன்களில் ஆட்டமிழக்க, பாபர் அசாம் 29 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து ஃபக்கர் ஷமான், இஃப்திகார் அகமது ஆகியோர் தலா 13 ரன்களை சேர்த்தனர்.
அடுத்தடுத்து ஆட்டமிழப்பு
பாகிஸ்தான் அணி 91 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி கொண்டிருந்த நிலையில், அதன் பிறகு இலங்கை வீரர்களின் சூழலில் சிக்கி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தனஞ்செய்யா டி சில்வாவில் வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தனர். இதே போன்று சிஎஸ்கே வீரர் தீக்சனா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதிர்ச்சி தொடக்கம்
பாகிஸ்தான் அணி மேலும் 30 ரன்கள் சேர்ப்பதற்குள் அடுத்த 6 விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 121 ரன்களுக்கு சுருண்டது. 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. மெண்டிஸ், குணதிலாகா ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினர். தனஞ்செய்யா டி சில்வா 9 ரன்களில் வெளியேற, ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் நிசாங்கா பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார்.
இலங்கை அபாரம்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜபக்சா 24 ரன்களிலும், ஷனாகா 21 ரன்களிலும் வெளியேறினர். நிசாங்கா கடைசி வரை அபாரமாக விளையாடி 48 பந்துகளை எதிர்கொண்டு 55 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் 17வது ஓவரில் இலங்கை அணி 5 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. தற்போது அந்த அணி வீரர்கள் நல்ல உத்வேகத்துடனும், சாதிக்க வேண்டிய வெறியுடனும் விளையாடுவதால், அந்த அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.