மும்பை: ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி–20 கிரிக்கெட் போட்டிகளில், 10 சீசனில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்துக்கு, ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஆண்டில் நடக்க உள்ள 11வது சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்க உள்ளன.
