இந்தியாவிடம் சுருண்ட வங்கதேசம்
இதேபோல் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 324 ரன்கள் குவித்திருந்த நிலையில் பங்களாதேஷ் அணி 84 ரன்களுக்கு சுருண்டது. 240 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
நாளை தொடக்கம்
இந்நிலையில் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நாளை முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
8 அணிகள் மோதல்
சாம்பயின்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கும் 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இங்கிலாந்து, வங்காளதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளும் இடம் பிடித்துள்ளன.
அரையிறுதிக்கு 4 அணிகள்
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
இங்கிலாந்து-வங்கதேசம் மோதல்
நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து- வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி 4ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு
இதைத்தொடர்ந்து 8 ஆம் தேதி இலங்கையையும், 11-ந் தேதி தென்ஆப்பிரிக்காவையும் எதிர்கொள்கிறது. முன்னதாக நடைபெற்ற பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இந்தியா மீண்டும் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.