இரண்டு முறை சாம்பியன்கள்
இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் என, பேரைக் கேட்டாலே அதிரவைக்கும் அணியாக சிஎஸ்கே உள்ளது. வேறெந்த அணிக்கும் இல்லாத மற்றொரு சி்றப்பு, இதுவரை அனைத்து சீசனிலும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணி என்பதாகும்.
ஏலத்தில் ஆச்சரியமூட்டியது
இரண்டாண்டுகளுக்குப் பிறகு திரும்புவதால், இந்த சீசனில் சிஎஸ்கே மீது தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அணிக்கான டோணி, சின்ன தல சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை அணி தக்க வைத்தது. வீரர்களுக்கான ஏலத்தின்போது, பா டுபிளாசி, டாய்னே பிராவோ, முரளி விஜய் போன்ற முந்தைய வீரர்களை ஏலம் எடுத்தது. அதைத் தவிர மற்ற அணிகள் ஏலத்தில் தலையை பிய்த்துக் கொண்டிருக்கையில், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், ஷர்துல் தாகுர், இம்ரான் தாகிர், அம்பாடி ராயுடு ஆகியோரை ஏலத்தில் எடுத்து ஆச்சரியமூட்டியது.
சிஎஸ்கேயின் பதில்
பெரும்பாலும் சீனியர் வீரர்களையே ஏலம் எடுத்ததால் மற்ற அணிகள் குழம்பின. வீரர்களின் சரா சரி வயது 30ஆக இருந்தபோது, சில இளம் வீரர்களை ஏலம் எடுத்தது சிஎஸ்கே. என்னடா இது, ஒன்னுமே புரியலயே என்று அனைவரும் குழம்பியபோது, டோணியே எங்ககிட்ட இருக்கார் என்பதுதான் சிஎஸ்கேவின் பதிலாக இருந்தது. ஐபிஎல்லில் மிகச் சிறந்த கேப்டன், அதிக போட்டிகளி்ல் விளையாடியவர், அதிக வெற்றி சதவீதம் என, அதிகம் அதிகம் என்று சொல்லக் கூடிய அனைத்து சாதனைகளும் டோணியிடம்தான் உள்ளது. தன்னுடைய பழைய பெருமையை தக்க வைக்கும் வகையில், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
அணி விவரம்
மகேந்திர சிங டோணி கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பா டுபிளாசி, ஹர்பஜன் சிங், டாய்னே பிராவோ, ஷேன் வாட்சன், கேதார் ஜாதவ், அம்பாடி ராயுடு, தீபக் சாகர், கேஎம் ஆசிப், கனிஷ்க் சேத், லுங்கி நிகிடி, துருஷ் ஷோரே, முரளி விஜய், சாம் பில்லிங், மார்க் வுட், ஷிதிஷ் சர்மா, மோனு குமார், சைதன்யா பிஷ்னோய், இம்ரான் தாகிர், கர்ன் சர்மா,ஷர்துல் தாகுர், ஜெகதீசன்.