விரைவில் மகளிர் ஐபிஎல்
மகளிருக்கான ஐபிஎல் தொடர் 5 அல்லது 6 அணிகள் மூலம் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் ஐபிஎல் அணிகளை வாங்கிய தொழிலதிபர்கள், பிரபலங்கள் மகளிர் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டால், நிச்சயம் அணிகளை வாங்க ஆர்வமாக இருக்கிறோம் என்று அறிவித்துள்ளனர்.
ஐபிஎல் அணிகள் ஆர்வம்
குறிப்பாக ராஜஸ்தான், டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட அணிகளின் நிர்வாகிகள் மகளிர் ஐபிஎல் அணிகளை வாங்க ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் பலரும் தென் ஆப்பிரிக்கா லீக் தொடரில் அணிகளை வாங்கியுள்ளனர். இதனால் மகளிர் கிரிக்கெட்டிலும் கால் பதிக்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த நிலையில் மகளிர் ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகிகளிடம் விசாரிக்கையில், மகளிர் ஐபிஎல் தொடர் 2023ம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது உண்மைதான். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனா ஒப்பந்தம்?
அதேபோல் சென்னை அணியின் சில நிர்வாகிகளிடம் விசாரிக்கையில், மகளிருக்கான ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கப்படவுள்ளது. சென்னை அணிக்காக எப்படி தோனியை சிறு வயதிலேயே ஒப்பந்தம் செய்தோமோ, அதேபோல் ஸ்மிருதி மந்தனா ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதேபோல் சர்வதேச வீராங்கனையான கேட் கிராஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளை ஒப்பந்தம் செய்ய ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இது சென்னை ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.