
உலகக் கோப்பை
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் உதவிக்கு ஆஸ்திரேலிய பெண் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

அநாகரீகம்
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு உதவியாக இருந்த பெண் வீரர்கள் உடை மாற்றும் அறையில் பசிக்கு சான்ட்விச் தேடுகையில் கிறிஸ் கெய்ல் தனது இடுப்பில் இருந்த துண்டை அவிழ்த்து அவரிடம் இதை தான் தேடுகிறாயா என கேட்டு தனது ஆணுறுப்பை காட்டியதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபேர்பேக்ஸ் மீடியா செய்தி வெளியிட்டது.

வழக்கு
அந்த பெண்ணிடம் தான் அநாகரீகமாக நடக்கவில்லை என்று தெரிவித்துள்ள கெய்ல் ஃபேர்பேக்ஸ் மீடியா நிறுவனம் மீது அவதாறு வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.

மறுப்பு
தான் அவ்வாறு செய்யவில்லை என கெய்ல் மறுப்பு தெரிவித்தும் ஃபேர்பேக்ஸ் மீடியா மீண்டும் மீண்டும் அவ்வாறு செய்தி வெளியிட்டது. அதை அடிப்படையாக வைத்து பிற ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. இதையடுத்து அவதூறு வழக்கு தொடருமாறு முன்னணி ஆஸ்திரேலிய வழக்கறிஞர் மார்க் ஓ பிரையனிடம் கெய்ல் தெரிவித்துள்ளார் என அவரின் மேனேஜர் சைமன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











