4வது ஒருநாள் போட்டி
அதனால் ஒருநாள் தொடர் 2-1 என கணக்கில் உள்ளது. இதையடுத்து, மொகாலியில் 4வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கொடுத்தனர். குறிப்பாக, ஹிட்மேன் ரோகித் சர்மா தனது 40-வது ஒரு நாள் அரைசதம் அடித்து 95 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தவிடுபொடியாக்கிய பேட்டிங்
பல ஆட்டங்களில் தொடக்க வீரர்களான ரோகித், தவான் சரியாக ஆடவில்லை என்ற முணுமுணுப்புகளை இந்த போட்டியின் மூலம் தவிடுபொடியாக்கினர். தொடக்கம் முதலே ஒரு முடிவோடுதான் இருவரும் களம் இறங்கினர்.
பந்துகள் பறந்தன
தவறான பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் அனுப்பினர். தொடக்கம் முதலே நிதானமாக ஆடிய தவான்.. ஒரு கட்டத்தில் ஆஸி. பந்துகளை வெளுக்க ஆரம்பித்தார்.
143 ரன்கள் சாதனை
அதிரடியாக விளையாடிய தவான் தனது 16-வது ஒரு நாள் சதத்தை பதிவு செய்தார். அவர் 115 பந்துகளில் 143 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதுவே ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் அவர் அடித்த அதிகபட்ச ரன்களாகும். தொடர்ந்து பல போட்டிகளில் சொதப்பி.. விமர்சனத்துக்கு உள்ளான தவான்.... 143 ரன்கள் என்ற தமது அதிகபட்ச ரன்களின் வழியே பதில் சொல்லி உள்ளார்.