ரசலை ரன் அடிக்கவிடாமல் செய்தது இப்படிதான்…! தோனி சொன்ன ரகசியத்தை லீக் செய்த சாஹர்
Recommended Video

சென்னை:அணியின் கடைசி ஓவரில் ரசலை ரன்கள் அடிக்க விடாமல் தடுக்க எப்படி பந்துவீச வேண்டும் தோனி அறிவுத்தினார் என்று சாஹர் கூறியிருக்கிறார்.
சென்னையில் நடந்த 23வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ரசல் மட்டும் அரைசதம் அடிக்க.. கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மிக எளிதான இந்த இலக்கை எடுக்க தோனி அணி ரொம்ப நேரம் எடுத்துக் கொண்டது. ஜவ்வாக இழு... இழுன்னு இழுத்து 7.2 ஓவரில் சென்னை அணி, 3 விக்கெட்டுகளை இழந்த 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருது
சென்னை அணியின் தீபக் சாஹகர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். ட்டி குறித்து அவர் கூறியதாவது: நான் 19 ஆவது ஓவரை வீச வரும்போது முதல் 5 பந்துகளை நான் நினைத்தது போன்று வீசினேன்.

தோனி ஓடி வந்தார்
அப்போது கடைசி பந்தினை நான் வீச தயார் ஆனேன். அப்போது தோனி என்னை நோக்கி ஓடிவந்தார். நான் பந்துவீசுவதை நிறுத்தினேன். தோனி என் அருகில் வந்து நிதானமாக வீசு.

ஆட்டத்தின் முடிவு
இந்த பந்தில் தான் ஆட்டத்தின் முடிவே இருக்கிறது என்று கூறினார். ஏனெனில் இந்த பந்தில் நீ சிங்கிள் கொடுத்தால் அடுத்த ஓவர் முழுவதுமாக ரசலுக்கு கிடைக்கும். அதனால் அவர் பெரிய அளவில் ரன்களை குவிக்கக்கூடும்.

திணறிய ரசல்
எனவே பந்தினை பாதி பிட்சில் குத்தி ஆப் திசையில் வீசு... நிச்சயம் ரசல் திணறுவார் என்றார். நானும் அதன்படி பந்து வீசினேன்.. ரசலால் அடிக்க முடிய வில்லை என்று தீபக் சாஹர் கூறினார்.


Click it and Unblock the Notifications