ஆட்ட நாயகன் விருது
சென்னை அணியின் தீபக் சாஹகர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். ட்டி குறித்து அவர் கூறியதாவது: நான் 19 ஆவது ஓவரை வீச வரும்போது முதல் 5 பந்துகளை நான் நினைத்தது போன்று வீசினேன்.
தோனி ஓடி வந்தார்
அப்போது கடைசி பந்தினை நான் வீச தயார் ஆனேன். அப்போது தோனி என்னை நோக்கி ஓடிவந்தார். நான் பந்துவீசுவதை நிறுத்தினேன். தோனி என் அருகில் வந்து நிதானமாக வீசு.
ஆட்டத்தின் முடிவு
இந்த பந்தில் தான் ஆட்டத்தின் முடிவே இருக்கிறது என்று கூறினார். ஏனெனில் இந்த பந்தில் நீ சிங்கிள் கொடுத்தால் அடுத்த ஓவர் முழுவதுமாக ரசலுக்கு கிடைக்கும். அதனால் அவர் பெரிய அளவில் ரன்களை குவிக்கக்கூடும்.
திணறிய ரசல்
எனவே பந்தினை பாதி பிட்சில் குத்தி ஆப் திசையில் வீசு... நிச்சயம் ரசல் திணறுவார் என்றார். நானும் அதன்படி பந்து வீசினேன்.. ரசலால் அடிக்க முடிய வில்லை என்று தீபக் சாஹர் கூறினார்.