அந்த க்ரூப்பில் மொத்தம் பதிமூன்று அணிகள். அவற்றிடையே நடந்த நாக்-அவுட் போட்டிகளின் அடிப்படையில் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. |
13 அணிகளின் மோதல்
அந்த க்ரூப்பில் மொத்தம் பதிமூன்று அணிகள். அவற்றிடையே நடந்த நாக்-அவுட் போட்டிகளின் அடிப்படையில் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
|
இறுதிப் போட்டி
பீட்டர்போரோ சிசி அணியும், ஹை வைகோம்ப் சிசி அணியும் மோதிய இறுதிப் போட்டியில், முதலில் ஆடிய பீட்டர்போரோ அணி 188 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆட வந்தது ஹைகோம்ப் அணி.
பரிதாபமான முறையில் அவுட்
சிறப்பாக விளையாடி வந்த அந்த அணி 38வது ஓவரில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 186 ரன்கள் எடுத்து அபாரமான நிலையில் இருந்தது. ஆனால் அடுத்து நடந்ததுதான் பரிதாபம். 39.5வது ஓவரில் அது அனைத்து விக்கெட்களையும் இழந்து 187 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
கீரன் ஜோன்ஸ் குண்டு
ஹைகோம்ப் அணி வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் கீரன் ஜோன்ஸ் மற்றும் தன்யால் மாலிக் ஆகியோர்தான். 38வது ஓவரில் கீரன் ஜோன்ஸ், முதல் நான்கு பந்துகளில் ஹைகோம்ப் அணியின் நான்கு விக்கெட்களை சாய்த்து, அந்த ஓவரையும் மெய்டனாக வீசினார்.
அடுத்த ஓவரில் அல்பாயுசு
அடுத்த ஓவரில், ஹைகோம்ப் அணியில் 58 ரன்கள் எடுத்து இருந்த நாதன் ஹாக்ஸ் களத்தில் நிற்க, எப்படியும் அந்த அணி வென்று விடும் என நினைத்து, பீட்டர்போரோ அணி கேப்டன், தன் பகுதி நேர சுழல் பந்து வீச்சாளர் தன்யால் மாலிக்கிடம் பந்தை கொடுத்தார்.அவர் வந்து சூறாவளியென ஹைகோம்ப்பை காலி செய்தார்.
சீட்டுக் கட்டு போல
மிச்சமிருந்த மூன்று விக்கெட்களையும் மாலிக் எடுத்து அசத்தினார். ஹைகோம்ப் அணி 187 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி இறுதிப் போட்டியை இழந்தது. வெறும் 11 பந்துகளில் ஒரு அணியின் தலையெழுத்து டகால்டியாகிப் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரிதாபமய்யா
கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இணையத்தில், இந்த கிளப் அணியை வைத்து கலாய்த்து வருகிறார்கள். இந்த செய்தி #collapzilla என்ற பெயரில் டிரென்ட் ஆகி வருகிறது.