இங்கிலாந்து தொடர்
பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாகிஸ்தானுக்கு செல்லாமல் இருந்த அணிகள் தற்போது அங்கு செல்ல தொடங்கியுள்ளன. அந்தவகையில் கடைசியாக கடந்த 2005ம் ஆண்டு பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடிய இங்கிலாந்து அணி, 17 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் முதல்முறையாக அங்கு சென்றுள்ளது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
விநோத சிக்கல்
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள இங்கிலாந்து அணி வீரர்களுக்கு விநோத பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அந்த அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட மொத்தம் 14 பேருக்கு புதிதாக வைரஸ் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமாபாத்தில் தனியார் விடுதியில் உள்ள அவர்களுக்கு திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தொண்டை வலிகள், வயிற்றுப்பிரச்சினைகள் என அவதிப்பட்டு வருவதாக தெரிகிறது.
24 மணி நேரம் தான்
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே நாளைய தினம் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இப்படி இருக்கையில் பாதி வீரர்கள் மட்டுமே பயிற்சி பெற்று வருகின்றனர். மருத்துவர்கள் குணமடைந்துவிடும் எனக்கூறியுள்ள போதும், முக்கிய வீரர்கள் சிலர் விளையாடவில்லை என்றாலும், ஆட்டம் பாதிக்கப்படும் என தெரிகிறது.
உணவு பிரச்சினை
முன்னதாக பாகிஸ்தானில் உணவு சரியில்லை என்றும், உடல்நிலை கெடுகிறது என்றும் கூறியிருந்த இங்கிலாந்து அணி, தங்களுடன் ஒரு ஸ்பெஷல் சமையல் கலைஞரையும் அழைத்துச் சென்றனர். டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக 7 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக பாகிஸ்தான் சென்றிருந்தது. அப்போது தான் இந்த உணவுப்பிரச்சினை இருந்தது குறிப்பிடத்தக்கது.