ஸ்ரீசாத்
சையது முஸ்டாக் கோப்பை போட்டிக்கான கேரளா அணியில் ஸ்ரீசாத் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது வலைப்பயிற்சியில் ஸ்ரீசாத் ஈடுப்பட்டு வருகிறார். வலைப்பயிற்சியில் பவுலிங் செய்து வரும் ஸ்ரீசாத் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.
பழைய ஸ்டைல்
கிட்டத்தட்ட தனது பழைய பவுலிங் ஸ்டைலை ஸ்ரீசாத் மீண்டும் பெற்றுவிட்டார் என்றுதான் கூற வேண்டும். இப்படிப்பட்ட நிலையில் களத்தில் அவரின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளித்துள்ளது. தற்போது 37 வயதாகும் இவர் களத்தில் மிகவும் கோபமாக காணப்படுகிறார்.
இளம் வீரர்கள்
இளம் வீரர்களின் விக்கெட்டை எடுத்துவிட்டு அவர்களை கடுமையாக திட்டுகிறார். ஒவ்வொரு பந்தும் போட்டுவிட்டு பேட்ஸ்மேன்களை ஸ்லெட்ஜ் செய்கிறார். இந்திய அணியில் விளையாடிய போதும் ஸ்ரீசாத் இப்படித்தான் செய்து வந்தார். ஆனால் தற்போது 8 ஆண்டுகளுக்கு பின் வந்தும் கூட அவர் சாந்தமாக ஆடுவது இல்லை.
கோபம்
முதல்முறை சையது முஸ்டாக் கோப்பையில் ஆடும் இளம் வீரர்களை ஊக்குவிக்காமல் தேவையின்றி அவர்களை ஸ்ரீசாத் சீண்டுகிறார். ஸ்ரீசாத்தின் கோபம் ஒரு காலத்தில் நன்றாக இருந்தாலும், இப்போது அவரின் கோபம் அதிர்ச்சி அளிக்கிறது. மீண்டும் இந்திய அணியில் இணையும் விருப்பத்தில் ஆடும் ஸ்ரீசாத் கோபம் மீது கவனம் செலுத்தாமல் ஆட்டம் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று பலரும் அவருக்கு எதிராக விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.