முதல் டெஸ்ட் போட்டி
அதற்கேற்றவாறு, வழக்கமான பெர்த் டபிள்யுஏசிஏ மைதானத்தில் நடை பெறாமல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆப்டஸ் என்ற மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைப்பதோடு, பந்துகள் முன் எப்போதும் இல்லாத வகையில் நன்கு பவுன்ஸ் ஆகும் என்பதால், பேட்ஸ் மேன்களை காட்டிலும் பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள்.
விராட் கோலி பேட்டி
மைதானம் குறித்தும், 2வது டெஸ்ட் போட்டிக்கான வியூகம் குறித்தும் செய்தியாளர்களிடம் பேசிய கோலி, இந்த போட்டியை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்கொள்ள உள்ளதாக கூறினார். முதன்முறையாக போட்டி நடைபெறுவதால் மைதானத்தின் தன்மை எப்படி இருக்கும் என்று மிகுந்த ஆர்வமுடன், இந்திய அணியினரும் உள்ளதாகவும் கோலி தெரிவித்தார்.
ரசிகர்கள் நம்பிக்கை
செயற்கை மைதானத்தில் இந்திய அணியின் செயல்பாடுகளில் வேகம் குறைவு என்ற விமர்சனங்கள் ஒரு பக்கம் உள்ள நிலையில் இயற்கையாக அமைக்கப் பட்டுள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெறுவதால் போட்டியின் முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமே என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் ரசிகர்கள்.
மீண்டும் களத்தில் அதே 11 பேர்
இதனிடையே, பெர்த் டெஸ்ட் ஆட்டத்துக்கான 11 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய அணி, அறிவித்துள்ளது. முதல் டெஸ்டில் தோல்வியடைந்தாலும் அணியில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.