தத்துவ முத்து
அவர் எங்கு போனாலும், என்ன பேசினாலும் அது ஹைலைட்டாக மாறி விடுகிறது. அது போல தான் அவர் ஒரு தத்துவ முத்தை உதிர்த்திருக்கிறார். பள்ளி காலங்களில் தமது கல்வியின் நிலைமை என்ன என்பதை ஜாலியாக வெளியிட்டிருக்கிறார்.
100 மதிப்பெண்
இது குறித்து கோலி கூறியிருப்பதாவது: படிப்பில் நான் ஒரு மோசமான மாணவன். குறிப்பாக கணக்கு தனக்கு சுத்தமாகவே வராது. கணக்கில் அதிகபட்சமாக இருப்பது 100 மார்க்.
எடுப்பது 3 மார்க்
ஆனால் நானோ எடுப்பது வெறும் 3 தான். கணக்கின் பின்னணியில் உள்ள சிக்கல்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த பார்முலாக்களை இதுவரை என் வாழ்வில் என்றுமே முயற்சித்ததே கிடையாது.
தேவையா என்று முடிவு
என் 10 வகுப்பு தேர்வை எப்படியாவது தாண்டினாலே போதும் என்று நினைத்தேன். ஏன் என்றால் அதன் பின் கணக்கு பாடம் தேவையா? இல்லையா? என்பதை முடிவு செய்து கொள்ள முடியும்.
அதிகமாக உழைத்தேன்
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் தேர்வில் பாஸ் ஆக கடினப்பட்ட அளவுக்கு கிரிக்கெட்டில் கூட கஷ்டப்பட்டதில்லை. அதாவது, கிரிக்கெட்டை விட கணித பாடத்திற்கு அதிகமாக உழைத்தேன். ஏன் என்றால் எனக்கு கணக்கு பாடம் சுத்தமாக வரவே வராது.
சிறந்த ஆட்டம்
2012ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடருக்கு பின் என்னுடைய உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்தினேன். அன்று முதல் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன் என்றார்.