எப்படி நடந்தது
சமூக வலைத்தளத்தில், ஆன் லைன் மூலம் பணம் பரிமாற்றம் செய்த போதே ஐசிசி, இவ்வளவு பெரிய தொகையை இழந்து உள்ளது. அதாவது, போலி இமெயில், போலி வங்கி கணக்கு, போலி இணையத்தள முகவரியை வைத்து, உண்மையான நபர்கள் அனுப்பவது போல் இந்த மோசடி கும்பல் செயல்பட்டு இருக்கிறது.
போலி பெயர்
இதனை நம்பி ஐசிசியில் உள்ள அறிவாளிகளும் பணத்தை அனுப்பி தற்போது ஏமாந்து இருக்கிறார்கள். ஐசிசி தலைவர், வழக்கறிஞர்கள், விளம்பரத்தாரர்கள் போன்றவர்கள் பெயரில் மோசடி இணையத்தள முகவரி, வங்கி கணக்கை பயன்படுத்தி மோசடி கும்பல் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.
யாருக்கு தொடர்பு
தற்போது இந்த வழக்கை அமெரிக்காவில் உள்ள FBI அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த மோசடியில், ஐசிசியின் பணி புரியும் நிர்வாகிகளுக்கும், தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீவிர விசாரணை
இதில் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. எத்தனை முறை கொள்ளையடிக்கப்பட்டது போன்ற கருத்து இதுவரை வெளியாக வில்லை. இது போன்ற மோசடியை தவிர்க்க வேண்டும் என்றால், நா உண்மையான நபருக்கு தான் பணம் அனுப்புகிறோமா என்பதை அந் நபரிடமே கேட்டு தெரிந்து கொள்வது மூலம் மோசடி தவிர்க்கப்படும்.