அவுட்டாகாமல் தப்பினார்
இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் வார்னர் ஒரு ரன்னில் இருக்கும்போது, பும்ரா வீசிய பந்து, ஸ்டம்பில் தாக்கியது. பெயில்ஸ் விழாததால் அதிர்ஷ்டவசமாக அவர் அவுட்டாகாமல் தப்பினார். இதே போல, இந்த உலகக் கோப்பைத் தொடரில் 10 முறை பந்து, ஸ்டெம்பை தாக்கியும் பெய்ல்ஸ் விழவில்லை.
கோலி கோரிக்கை
இதனால் பந்துவீச்சாளர்களும் கேப்டன்களும், வீரர்களும் செமத்தியாக அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, எல்இடி பெயில்சை நீக்க வேண்டும் என்று இந்திய கேப்டன் விராத் கோலி, ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.
ஐசிசி நிராகரிப்பு
இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை ஐசிசி முற்றிலும் நிராகரித்து இருக்கிறது. இது பற்றி ஐசிசி கூறியிருப்பதாவது: தற்போது உலகக் கோப்பை போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், எல்இ டி பெயில்சை மாற்றினால் நம்பகத்தன்மை கேள்விகுறியாகிவிடும்.
வயர்கள் உள்ளன
2015ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இருந்தே இந்த பெய்ல்ஸ்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த நடைமுறையை மாற்ற முடியாது. 10 அணிகள் ஆடும் 48 ஆட்டங்களிலும் ஓரே கருவி தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த உலகக் கோப்பையில் ஸ்டம்புகளின் மீது 10 முறை பந்து பட்டும், பெயில்கள் கீழே விழவில்லை. ஏராளமான வயர்கள் பயன்படுத்தப்பட்டு, கனமாக உள்ளதால், விழுவதில்லை என்று ஐசிசி தெரிவித்துள்ளது.