
என்ன நடந்தது?
2020 ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில், அங்கிருந்தே இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அதற்காக இந்திய அணி துபாயில் முகாமிட்டு இருந்த போது, ஆஸ்திரேலிய பயணத்துக்கு 48 மணி நேரத்திற்கு முன் வீரர்களின் குடும்பங்களுக்கு அனுமதி இல்லை என ஆஸ்திரேலிய அரசு கூறி விட்டதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறி இருக்கிறது.

அதிருப்தியில் வீரர்கள்
முதலில் அனுமதி உண்டு என கூறிவிட்டு கடைசி நேரத்தில் மறுத்ததால் வீரர்கள் அதிருப்தியில் இருந்துள்ளனர். ஏழு இந்திய வீரர்கள் குழந்தைகள் உட்பட தங்கள் குடும்பத்தினரை அழைத்து வந்திருந்தனர். அவர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

ரவி சாஸ்திரி முடிவு
ஆஸ்திரேலியா இந்திய வீரர்களை தொடருக்கு முன்பே சீண்டத் துவங்கி இருப்பதை புரிந்து கொண்ட பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிசிசிஐயிடம் வீரர்கள் சார்பாக முடிவை கூறி இருக்கிறார். குடும்பத்துடன் அனுமதித்தால் ஆஸ்திரேலியா செல்கிறோம், இல்லையென்றால் போக முடியாது என அவர் திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.

அலறிய ஆஸி.
அதை பிசிசிஐ, ஆஸ்திரேலியாவிடம் கூற, அவர்கள் அலறி அடித்துக் கொண்டு அனுமதி பெற அரசை நாடி இருக்கிறார்கள். ஞாயிறு அன்று இதற்காக ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகளிடம் பேசி அனுமதி வாங்கி இருக்கிறது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. இந்த விஷயம் தற்போது தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











