வீணான வாய்ப்பு
இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் பெவுமா மற்றும் வெண்டர்டுசனுக்கு ரன்களை வாரி வழங்கினர். அவர்களது 200 ரன் பார்ட்னர்ஷிப்பை இந்திய வீரர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் 2வது போட்டியில் பந்துவீச்சாளர்கள் மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கினார் ராகுல்.
புவனேஸ்வர் குமார்
'ஆனால் இந்த வாய்ப்பையும் பந்துவீச்சாளர்கள் வீணடித்து வருகின்றனர். குறிப்பாக புவனேஸ்வர் குமார் 4 ஓவர்கள் வீசி 40 ரன்களை விட்டு கொடுத்தார். இதனால் எப்பா..சாமி நீ பந்தே வீச வேண்டாம் என்று சொல்விட்டார் ராகுல். பும்ராவை தவிர வேறு எந்த பந்துவீச்சாளரும் தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி தர முடியவில்லை.
பி.சி.சி.ஐ. அதிரடி
ஸ்விங் மற்றும் வேகம் இரண்டையும் இழந்த புவனேஸ்வர் குமார், இனி இந்திய அணியில் இடம்பெறவதே சந்தேகம் தான். இதனால் பந்துவீச்சு இலாகாவில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது.. சிராஜ், ஆவேஷ் கான், பிரஷித் கிருஷ்ணா, ஹர்சல் பட்டேல், இஷான் போரேல், உம்ரான் மாலிக், தீபக் சாஹர் போன்ற வீரர்களை அணிக்குள் கொண்டு வர பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
பயிற்சியாளர்
மேலும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருணின் பங்களிப்பு தான். தற்போது அவர் இல்லாதது இந்திய அணிக்கு குறையாக பார்க்கப்படுகிறது. தற்போதைய பயிற்சியாளர் பாராஸ் மாம்பரேவின் செயல்பாடை ஒரே தொடரில் கணிப்பது தவறு. இதனால் தொடர்ந்து பந்துவீச்சில் சொதப்பி வரும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்படலாம்.