ரோஹித் சர்மா
டி 20 தொடரில் ரோஹித் சர்மா சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்பட வில்லை. இருந்த போதிலும் ஒருநாள் தொடரில் நிச்சயம் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுப்பார். ஆக அவர் அணியில் இடம்பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
ஷிகர் தவான்
மற்றொரு துவக்க வீரரான ஷிகர் தவான் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க வேண்டும். பல முக்கிய நேரங்களில் பொறுப்பின்றி ஆடி ரசிகர்களை வெறுப்பேற்றும் போக்கு அவரிடம் உள்ளது. அதை மாற்றி, ஆட்டத்தை தொடரும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு கூடுதல் பலம் தான்.
விராட் கோலி
இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியை பற்றி சொல்லவே வேண்டாம். ஆஸ்திரேலிய அணியுடனான இந்த தொடரின் மூலம் எத்தனை சாதனைகள் நிகழ்த்துவார் என்பது தெரியாது. மொத்தத்தில் ரசிகர்களுக்கு தீனி காத்திருக்கிறது என்பது தான் உண்மை.
கே.எல் ராகுல்
டி 20 தொடரில் மாஸ் காட்டியவர். ஒருநாள் தொடரிலும் அதே போன்றதொரு சிறப்பாக செயல்பட்டால் அது இந்திய அணிக்கு பிளஸ்.
அம்பத்தி ராயுடு
மிடில் ஆர்டரில் அம்பத்தி ராயுடு தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான் அடுத்த வீரர்களுக்கு எளிதாக இருக்கும். அது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் நெருக்கடியையும் ஏற்படுத்தும்.
தோனி
முன்னாள் கேப்டனான தல தோனியை பற்றி கூற வேண்டியதில்லை. இருப்பினும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதை உணர்ந்துள்ள அவர், தமது பங்களிப்பை சரியாக செய்யும் பட்சத்தில் அது ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
விஜய் சங்கர்
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் இளம் வீரர் தான் இந்த விஜய் சங்கர். அவருக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. இவர் தனக்கு கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
குல்தீப் யாதவ்
சைனாமேன் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ், நாளைய போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என நம்பலாம். தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தால் அது ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
முகமது சமி
சிறந்த பார்மில் இருக்கும் முகமது சமி, ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கான இடம் உறுதியாகும்.
சாஹல்
டி 20 தொடரில் சொதப்பியவர் யுஸ்வேந்திர சாஹல். எனவே ஒருநாள் தொடரிலாவது தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க வேண்டும். அது தான் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஜஸ்ப்ரித் பும்ரா
இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் பும்ரா ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரிலும் மாஸ் காட்டுவார் என்பதில் சந்தேகம் இல்லை.