துபாய்: பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா வென்றது.
பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஒருதினப் போட்டி சாம்பியனான இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் இலங்கையை அபாரமாக வென்றது. முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மழையால் மைதானம் ஈரமாக இருந்ததால் கைவிடப்பட்டது.