
உலக கோப்பை கால்பந்து
அதனை பிபா தலைவர் கியானி இன்பான்டினோ அறிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:2020ம் ஆண்டு உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டியை இந்தியா நடத்துகிறது. அதற்கான அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
சம்மேளனம் உறுதி
இதே அறிவிப்பை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் உறுதி செய்து இருக்கிறது. இது குறித்து அதன் பொதுச்செயலாளர் குஷால் தாஸ் கூறியதாவது:
கூட்டமைப்புக்கு நன்றி
சர்வதேச கால்பந்து கூட்டமைப்புக்கு நாங்கள் நன்றி தெரிவித்திருக்கிறோம். இதன் மூலம், இந்தியாவின் மகளிர் கால்பந்து மேலும் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம்.
வாய்ப்பு கிடைத்துள்ளது
இந்தியாவில் பல்வேறு தருணங்களில் மகளிர் கால்பந்தை முன்னேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே தான் உலக கோப்பை தொடர் நடத்துவதற்காக விண்ணப்பித்திருக்கிறோம். தற்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார்.

இரண்டாவது முறை
இதற்கு முன்பாக 2017ம் ஆண்டு பிபா கால்பந்து தொடரை இந்தியா நடத்தி இருக்கிறது. தற்போது இரண்டாவது முறையாக இது போன்ற வாய்ப்பை இந்தியா பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











