தவான் ஏமாற்றம்
தொடக்க வீரராக களமிறங்கிய தவான், ரோகித் ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 17 பந்துகளை எதிர் கொண்ட ஷிகர் தவான் 7 ரன்கள் எடுத்திருந்த போது தேவையில்லாத ஷாட் ஆடி ஆட்டமிழந்தார். ஒரு முனையில் அதிரடியாக விளையாட முயற்பட்ட ரோகித் சர்மா, 31 பந்துகளை எதிர்கொண்டு 27 ரன்கள் சேர்த்தார்.
விராட் கோலி
இதில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்சர்கள் அடங்கும். அதே ஓவரில் விராட் கோலி 15 பந்துகளில் 9 ரன்கள் எடுத்திருந்த போது, ஷகிபுல் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இந்திய அணி 49 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து, கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஸ்ரேயாஸ் குறை
ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். எனினும் 24 ரன்கள் எடுத்திருந்த போது அவருடைய குறையான ஷாட் பாலை அடிக்க முயன்று கேட்ச் ஆனார்.இந்திய அணி 92 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இதனையடுத்து கேஎல் ராகுல் நடுவரிசையில் அரணாக இருந்து ரன்களை சேர்த்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிய தொடங்கியது.
ராகுல் அபாரம்
இதனையடுத்து 70 பந்துகளை எதிர்கொண்ட கேஎல் ராகுல் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆல் ரவுண்டர்கள் என நம்பி அணியில் சேர்க்கப்பட்ட தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது ஆகியோர் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி 41.2 வது ஓவரில் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஷகிபுல் ஹசன் 5 விக்கெட்டுகளையும், எபதாட் ஹூசைன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.