3 அணிகள்
இருப்பினும் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளை வைத்து முத்தரப்பு தொடரை செப்டம்பரில் நடத்தலாமா என்று யோசித்து வருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியா, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி நிர்வாகங்களுடன் பேச்சு நடந்து வருகிறதாம்.
பரவல் அதிகரிப்பு
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்திய அணி வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவே மகளிர் அணியின் முடிவுக்குக் காரணம் என்று கருதப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்துடன் சர்வதேச அளவில் பெரிய அளவிலான போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போதுதான் இங்கிலாந்து அணி மேற்கு இந்தியத் தீவுகளுடன் டெஸ்ட் போட்டிகளில் மோதி வருகிறது.
போட்டிகள் தள்ளிவைப்பு
அதேபோல இங்கிலாந்து அணி, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுடனும் அடுத்தடுத்து ஆடவுள்ளது. வேறு எங்குமே கிரிக்கெட் போட்டிகள் இப்போதைக்கு நடைபெறவில்லை. இந்தியாவில் கூட ஐபிஎல் போட்டிகள் தள்ளிப் போயுள்ளன. டி20 உலகக் கோப்பைப் போட்டியும் கூட தள்ளிப் போடப்பட்டு விட்டது நினைவிருக்கலாம்.
முகாமுக்கே வழியில்லை
இந்தியாவைப் பொறுத்தவரை போட்டிகளை நடத்துவதை விட பயிற்சி முகாமுக்குக் கூட ஏற்பாடு செய்ய முடியாத நிலை உள்ளது. மும்பையில் கொரோனா தாண்டவமாடி வருகிறது. கொல்கத்தா, சென்னை என எந்த ஊரிலும் பயிற்சி எடுக்க முடியாத நிலைமை. பெங்களூரைப் பற்றி சொல்லவே தேவையில்லை. பாதிப்புகள் கிடுகிடுவென அதிகரித்தபடியே உள்ளன.