வைரல்
ஸ்மித் இப்படி நடந்து கொண்ட நிலையில் ஸ்மித் ஒரு ஏமாற்றுக்காரர். அவர் கொஞ்சம் கூட திருந்தவில்லை. உப்புத்தாள் சர்ச்சைக்கு பின் ஸ்மித் நல்லவராக வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் கொஞ்சம் கூட மாறவே இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.
விமர்சனம்
இந்திய வீரர்களை ஏமாற்றும் வகையில் நேற்று ஸ்மித் ஆடிய நிலையில் ஐபிஎல் தொடரில் இவரின் கேப்டன்சி பறிக்கப்படும் என்று கூறுகிறார்கள். அதன்படி வரும் ஐபிஎல் ஏலத்தில் ஸ்மித் ராஜஸ்தான் அணி மூலம் ரீட்டெயின் செய்யப்பட மாட்டார். இவரை ஏலத்தின் போது எடுக்க ராஜஸ்தான் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முடிவு
இவருக்கு பதிலாக இந்தியர் ஒருவரை அணியின் கேப்டனாக நியமிக்க ராஜஸ்தான் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பெரும்பாலும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பார் என்கிறார்கள். ஸ்மித் கேப்டன்சியில் கடந்த ஐபிஎல்லில் ராஜஸ்தான் மோசமாக ஆடியது.
கெட்டபெயர்
அதோடு இவரின் தனிப்பட்ட டி 20 பேட்டிங்கும் சரியில்லை. இந்திய ரசிகர்களிடமும் இவர் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டுள்ளார். இதனால் ஸ்மித் மீது ராஜஸ்தான் அணி நிர்வாகம் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறுகிறார்கள் .