
கிறிஸ் ஜார்டன்
சிஎஸ்கே அணி பெங்களூருவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டாலும், பிளேயிங் லெவனில் ஒரு குறை இருந்தது. வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் ஜார்டனை அணியில் சேர்த்து, அவர் ரன்களை வாரி வழங்கினார். கடந்த போட்டியில் கூட அவர் வீசிய முதல் ஓவரில் 11 ரன்கள் கொடுத்தார். இதனால் அவரை பயன்படுத்தாமல் சிஎஸ்கே வேறு வீரர்களை வைத்து சமாளித்தது.

பிரிட்டோரியஸ்
வேறு வழியில்லாமல் அவருக்கு வழங்கப்பட்ட 2வது ஓவரில் ஜார்டன் 9 ரன்களை வழங்கினார்.இதனால் சிஎஸ்கே அணி பிளேயிங் லெவனில் ஜார்டன் நீக்கப்பட்டு, பிரிட்டோரியஸ் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இன்று புனேவில் நடந்த பயிற்சி முகாமில் கூட , பிரிட்டோரியஸ் அதிக நேரம் பந்துவீசியும், பேட்டிங் செய்தும் பயிற்சி மேற்கொண்டார்.

சிறப்பு திட்டம்
இந்த நிலையில், குஜராத் அணியின் பேட்டிங் பவர் ஹவுசாக ஹர்திக் பாண்டியா உள்ளார். ஹர்திக் பாண்டியாவுக்கு கால் அருகே ஃபுல் லேங்தில் பந்துவீசினால், அதனை அவர் சிக்சருக்கு விரட்டுவார். இதனை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவை சமாளிக்க சிஎஸ்கே ஒரு திட்டம் போட்டுள்ளது. அதற்கான பயிற்சியையும் ஈடுபட்டனர்.

சமாளிக்குமா சிஎஸ்கே
அதாவது ஹர்திக் பாண்டியாவுக்கு வலது புறத்தில் ஓயிடாக யாக்கர் லெங்தில் பந்துவீசினால், அவரால் அடிக்க முடியாது. அதனை கவர் ஷாட் ஆடி ரன்கள் சேர்க்க முடியும். இதனால் இன்றைய பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள் ஓயிடு யாக்கரை வீசி பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த திட்டம் கைக்கொடுக்குமா என்று நாளை தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











