70 வயசாச்சு!
இரண்டு பேரின் வயதையும் சேர்த்துக் கூட்டினால் 70 வரும். அதாவது நேஹ்ராவின் வயது 36. யுவராஜுக்கு 34 வயதாகிறது இருவரும் டோணியின் தளபதிகளாக முன்பு வலம் வந்தவர்கள். இப்போது மீண்டும் இருவரும் முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.
செம பவுலிங்
நேற்றைய ஆசியாக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் நேஹ்ராவின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. மிகுந்த ஒழுங்குடன் அவர் நேர்த்தியாக பந்து வீசினார்.
யுவராஜின் அப்ரோச்
அதேபோல யுவராஜ் சிங்கின் அப்ரோச் சிறப்பாக இருந்தது. பொறுமையுடன் அவர் ஷாட்டுகளை அடித்தார். 15 ரன்கள்தான் எடுத்தார் என்றாலும் யுவராஜ் சிங்கின் செயல்பாடு டோணியைக் கவர்ந்து விட்டது.
அப்ரோச் சூப்பர்
இதுகுறித்து டோணி கூறுகையில் அவரது அப்ரோச் மிகவும் சிறப்பாக இருந்தது. எடுத்தவுடன் நாம் எல்லாவற்றையும் செய்து விட முடியாது. நாம் பந்துகளை எப்படி கணித்து எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியமானது.
நம்பிக்கையுடன் ஆடுகிறார்
யுவராஜ் சிங் நம்பிக்கையுடன் ஆடுகிறார். அவர் வித்தியாசமான வீரர். சரியான சமயத்திற்காக காத்திருக்கிறார். அதற்கு அவருக்கு காலம் தேவை. இதுபோன்ற மேலும் சில சூழல்கள் அவருக்குத் தேவை.
நேஹ்ராவைச் சொல்ல வேண்டியதில்லை
நேஹ்ராவுக்கு சூழலைச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை. அவரே என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுவார். முழுமையான பந்து வீச்சாளர் என்று பாராட்டினார் டோணி.
3 விக்கெட்
நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசி 23 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார் நேஹ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.