சீண்டிய நிர்வாகம்
இந்த நிலையில்தான், புனே அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவின் சகோதரர் ஹர்ஷ் கோயங்கா ஒரு ட்வீட் போட்டார். அதில் "காட்டுக்கு யார் ராஜா என்பதை ஸ்மித் நிரூபித்து விட்டார்" என கூறியிரு்தார் அவர். இதற்கு டோணி ரசிகர்கள் கொந்தளித்தனர்.
|
டோணி கம்மி
இதன்பிறகு டோணியின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக உள்ளதை வைத்து, மறைமுகமாக கேலி பேசும் வகையில் ஒரு டிவிட் போட்டிருந்தார் ஹர்ஷ் கோயங்கா. ஆனால் டோணி ரசிகர்களோ, புனே அணியை டிவியில் ரசிகர்கள் பார்க்க காரணமே டோணிதான், அவரை கேலி செய்வதா என கொந்தளித்தனர்.
பொக்கிய சாக்ஷி
இப்படி டோணி தனது சொந்த அணி நிர்வாகத்தால் அவமானப்படுத்துதலுக்கு உள்ளாகிவருவதை பார்த்து பொங்கிவிட்டார் டோணி மனைவி சாக்ஷி. இன்ஸ்டாகிராமில் மறைமுகமாக அதை வெளிப்படுத்தியுள்ளார் சாக்ஷி.
ஊழ்வினை தெரியுமா?
கர்மா எப்படி செயல்படும் என்பது குறித்த அந்த பதிவில், "ஒரு பறவை உயிரோடு இருக்கும் போது அது எறும்புகளை சாப்பிடும். அதே பறவை இறந்து விட்டால் எறும்புகள் பறவையை சாப்பிடும். நேரமும், சூழலும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். உங்கள் வாழ்க்கையில் எவர் ஒருவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், காயப்படுத்தாதீர்கள். இன்றைக்கு நீங்கள் வலுவானவர்களாக இருக்கலாம். ஆனால் மறந்துவிடாதீர்கள் காலம் உங்களை விட பலமானது. ஒரு மரம், பல மரக்குச்சிகளைத் தரும். ஆனால் ஒரே ஒரு மரக்குச்சி மில்லியன் கணக்கிலான மரங்களை அழிக்க வல்லது. ஆகவே நல்லவராக இருங்கள், நல்லதையே செய்யுங்கள்" என கூறியிருந்தார்.
எங்க டீம் சி.எஸ்.கேதான்
மற்றொரு பதிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சி மற்றும் ஹெல்மெட் அணிந்தபடி சாக்ஷி போஸ் கொடுத்துள்ளார். சிஎஸ்கேதான் எப்போதுமே எங்கள் மனதில் உள்ள டீம் என்பதை பதிலடியாக போட்டு காட்டிவிட்டார் சாக்ஷி. 'கேப்டன் கூல்' மனைவி இப்படி எரிமலையாக மாறுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பெண்மணியிடம் சிக்கிக்கொண்டதால் இப்போது மூச் விடாமல் இருக்கிறது புனே அணி நிர்வாகம்.