ராகுல் பேட்டி
இந்த போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து கேஎல் ராகுல் கூறுகையில், கடந்த 6 முதல் 7 மாதங்களாக இந்திய அணி பெரியளவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. 2020ம் ஆண்டுக்கு பின் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்துள்ளேன். அதேபோல் மிடில் ஆர்டரிலும் தொடர்ந்து விளையாடி வந்துள்ளேன். ரிஷப் பண்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டது எனக்கு தெரியாது.
ரிஷப் பண்ட் ரோல் எனக்கு
அதனால் ரிஷப் பண்ட் ரோலை செய்ய வேண்டும் என்று இந்திய அணி என்னை கேட்டுக்கொண்டது. இனி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்த ரோலை செய்வேன் என்று நினைக்கிறேன். இன்று அணி கேட்டுக் கொண்டதால், மீண்டும் பழைய ஆட்டத்திற்கு திரும்பியுள்ளேன். கடந்த சில நாட்களாக நடந்த பயிற்சிகளில், டைமிங்கில் அதிக கவனம் செலுத்தினேன். அதற்கு முதல் போட்டியிலேயே பலன் கிடைத்துள்ளது.
கேட்ச் விடுவது சாதாரணம்
மெஹதி ஹசன் சிறப்பாக விளையாடினார். சில ரிஸ்க்-களையும் பேட்டிங்கின் போது எடுத்தார். வெற்றிக்கு 30 ரன்கள் மட்டுமே தேவை இருக்கும் போது, ஒரு பவுண்டரி கூட எதிரணியை பிரஷரில் தள்ளிவிடும். அதனை மெஹதி ஹசன் சரியான பயன்படுத்தி கொண்டார். அதேபோல் கேட்ச் வாய்ப்புகளையும் தவறவிட்டோம். களத்தில் கேட்ச்களை கோட்டைவிடுவது சாதாரணம். ஆனால் வங்கதேசம் கடைசி வரை போராடி வெற்றிபெற்றுள்ளது. இந்த தோல்வியை பாடமாக எடுத்துக் கொண்டு கம்பேக் கொடுப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரிஷப் பண்ட் விலகல் ஏன்?
ரிஷப் பண்ட் தொடர்ந்து விளையாடி வருவதால், மருத்துவக் குழு அளித்த பரிந்துரை அடிப்படையில், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. இதே போன்று, டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.