For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சாதனை சில மணி நேரங்களில் முறியடிப்பு!

By Srividhya Govindarajan

மும்பை: மகளிர் கிரிக்கெட் டி-20 போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் என்ற இந்திய மகளிர் அணியின் சாதனை, சில மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி-20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது.

record broken in hours


முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி, இங்கிலாந்துடன் நேற்று நடந்த ஆட்டத்தில் விளையாடியது. இதில் முதலில் ஆடிய இந்தியா, 20 ஓவர்களில், 4 விக்கெட் இழப்புக்கு, 198 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா, மிதாலி ராஜ் அரைசதங்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவி செய்தனர்.

மகளிர் டி-20 போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன், 2010ல் நெதர்லாந்து அணிக்கு எதிராக, தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு, 205 ரன்கள் குவித்ததே, அதிகபட்ச ஸ்கோராகும்.

இங்கிலாந்து மகளிர் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு, 199 ரன்கள் எடுத்து வென்றது. அத்துடன், அதிகபட்ச ஸ்கோர் பட்டியலில், இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியாவை, சில மணி நேரங்களில் பின்னுக்கு தள்ளியது.







Story first published: Monday, March 26, 2018, 15:10 [IST]
Other articles published on Mar 26, 2018
English summary
Indian women cricket team’s record broken in few hours
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X