இலங்கையின் சுதந்திர தினம்
இலங்கையின் 50வது சுதந்திர தினத்தையொட்டி, 1998ல் முதல் முறையாக நிதாஸ் கோப்பை போட்டி நடந்தது. அதில், இந்தியா, இலங்கையைத் தவிர, நியூசிலாந்தும் பங்கேற்றது.
அதிரடி ஆட்டம்
50 ஓவர்கள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடராக அது அமைந்தது. பைனல்ஸ் போட்டிக்கு இந்தியாவும், இலங்கையும் முன்னேறின. மிகவும் பரபரப்பாகவும் அதிரடியாகவும் அமைந்தது அந்த ஆட்டம். முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது.
சச்சின் – கங்குலி சதம்
சச்சின் டெண்டுல்கர் -சவுரவ் கங்குலி ஜோடி, 252 ரன்கள் குவித்து அசத்தியது. சச்சின் இரண்டு சிக்சர், 8 பவுண்டரிகளுடன், 131 பந்துகளில், 128 ரன்கல் குவித்தார். கங்குலி, 136 பந்துகளில், இரண்டு சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் குவித்தார்.
பரபரப்பான கடைசி ஓவர்
இலங்கை அணியின் அரவிந்த் டிசில்வா புயல் போல் விளையாடினார். 94 பந்துகளில், 105 ரன்கள் எடுத்து மிரட்டினார். அதே நேரத்தில் மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை. அஜித் அகர்கர், 53 ரன்களுக்கு 4 விக்கெட்டை வீழத்தினார். கடைசி ஓவர், 8 ரன்கள் எடுக்க வேண்டும், ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது என்ற நிலையில், அனில் கும்ப்ளே பந்து வீசினார். அந்தப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அதுபோன்ற ஒரு பரபரப்பான வெற்றியை, ரோஹித் சர்மா தலைமையிலான அணி வென்று வரும் என்று எதிர்பார்க்கலாம்.