
கிம்பர்லே: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடரை இழக்கும் அபாயத்தில் இருந்து ஆண்கள் அணி தப்பியுள்ள நிலையில், மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் விளையாட தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான ஆடவர் அணி முதல் 3 ஒருதினப் போட்டிகளிலும் வென்று 3-0 என முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் தொடர் தோல்வியில் இருந்து தப்பியது.
