கிரிக்கெட் வீரர்களைப் பொருத்தவரையில் ஓய்வுக்குப் பிறகு வர்ணணையாளர்களாக பணியாற்றுவது வழக்கம். ஆனால் பிளின்டாப்
2009-ம் ஆண்டு ஓய்வு அறிவிக்குப் பிறகு 'தொழில்முறை' குத்துச் சண்டை வீரராக அவதாரமெடுத்தார். அவர் பங்கேற்ற முதல் குத்துச்சண்டைப் போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது.
ஹெவி வெயிட் பிரிவின் நடைபெற்ற இப்போட்டியில் அமெரிக்காவின் ரிச்சர்டு டாசனுடன் அவர் மோதினா. 4 ரவுண்டுகள் கொண்ட இப்போட்டியில் 2-வது ரவுண்டில் நாக் அவுட் செய்தார். ஆட்டத்தின் முடிவில் பிளின்டாப் 39-38 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார்.
ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கா விளையாடி இருக்கிறார் பிளின்டாப் என்பதும் குறிப்பிடத்தக்கது.