விசாரணைக் குழு விவகாரம்
இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமே தன்னிச்சையாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. அக்குழுவும் குருநாத் மெய்யப்பனும், குந்த்ராவும் தவறு செய்யவில்லை என தெரிவித்தது.
மும்பை கோர்ட் கண்டனம்
இதற்கு மும்பை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நியமித்த விசாரணைக் குழு சட்டவிரோதமானது என்று சாடியது. இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது.
பொறுப்பு வேண்டும்- டிராவிட்
இந்த நிகழ்வுகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல் டிராவிட், ஊடகங்களில் முதல் பக்கத்தில் இடம்பெறக் கூடியவர்கள் நாம். நமக்கு நிச்சயம் பொறுப்பு இருக்க வேண்டும். பிக்ஸிங் போன்ற சம்பவங்ள் இந்த நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை கடுமையாக பாதிக்கும்.
மக்கள் பார்க்கிறார்கள்..
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் என்பவர்கள் ரசிகர்களுக்காக.. கிரிக்கெட் வீரர்களுக்காக விளையாட்டை நடத்த வேண்டும். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.