கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டவில்லை
சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்த, 34 வயதாகும் ஸ்ரீசாந்த், கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லையே என்று விரக்தி அடைந்தார்.
40 வயது வரை விளையாடுவேன்
இந்தியாவுக்காக விளையாடுவதே என்னுடைய லட்சியம். 40 வயது வரை விளையாட முடியும். இந்தியாவுக்காக விளையாட முடியாத நிலையில், வேறு ஒரு நாட்டுக்காக விளையாடுவேன் என்று குரல் கொடுத்தார். கண்ணா, ஒரு நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்தால், ஐசிசி சட்டப்படி எந்த நாட்டுக்கும் விளையாட முடியாது என்று பிசிசிஐ கூறியுள்ளது.
இனி விளையாடவே முடியாது
பா.ஜ.,வில் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீசாந்த், தோல்வியடைந்தார். இனி இந்தியா மட்டுமல்ல எந்த நாட்டுக்கும் விளையாட முடியாத நிலையில் உள்ளார்.
குழம்பும் ஸ்ரீசாந்த்
மெர்சல் படத்துக்கு ஏன் இவ்வளவு பிரச்னை என்று விஜய் தரப்பு ஆச்சரியமாக இருப்பது போல, தெருவிலாவது விளையாடலாமா அல்லது அதற்கும் தடை இருக்குமா என்று தெரியாமல் ஸ்ரீசாந்த் புலம்பி வருகிறார்.