ஆல் ரவுண்டர்
இது குறித்து பேசியுள்ள கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் , இந்திய அணியில் தவான் அல்லது ரோஹித் சர்மாஇல்லாத நேரத்தில் தொடக்க வீரராக கே எல் ராகுல் களம் இறங்கி விளையாடி வருகிறார். நடுவரிசையில் விளையாட சொன்னாலும், கே எல் ராகுல் அசத்துகிறார். இதனால் ராகுல் நடுவரிசையில் இந்திய அணியில் தொடர வேண்டும்.
வசதி ஏற்படும்
மேலும் , கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டால் , கேப்டன் ரோகித் சர்மா கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை பிளேயிங் லெவனில் சேர்த்துக் கொள்ளும் வசதி ஏற்படும். இதனால் கே எல் ராகுல் தான் உண்மையான ஆல் ரவுண்டர் என்று நான் சொல்வேன். இனி கே எல் ராகுலை பினிஷர் ரோலில் பயன்படுத்த இந்திய அணி நிர்வாகம் முயற்சி செய்ய வேண்டும். இதனால் பண்டை விட, கேஎல் ராகுல் தான் அணியில் இடம்பெற வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
இவங்க வேண்டாமா?
எனினும், கவாஸ்கரின் இந்த கருத்து சரியாக இருந்தாலும், ஃபினிஷர் ரோலுக்கு சஞ்சு சாம்சனை பயன்படுத்லாம். கங்குலி காலத்தில் போதிய விக்கெட் கீப்பர் இல்லை என்பதால் டிராவிட் செயல்பட்டார். ஆனால் தற்போது சஞ்சு சாம்சன், இணான் கிஷன் போன்ற வீரர் இருக்கும் போது, ஏன் ராகுலுக்கு கூடுதல் பெறுப்பு வழங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
ரசிகர்களின் கூற்று
நேற்று பேசிய கவாஸ்கர், இந்திய அணியின் தொடக்க வீரராக ணிகர் தவான் தொடர வேண்டும் என்று கூறினார். அப்படி அவருடைய கூற்றின் படி பார்த்தால் இஷான் கிஷன் அல்லது சேஞ்சு சாம்சன் என்ற விக்கெட் கீப்பக்ளை தொடக்க வீரராக பயன்படுத்தி, கூடுதலாக ஒரு பந்தவீச்சாளர்களை பயன்படுத்தலாம் அல்லவா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.