தமிழக வீரர்
இந்திய டெஸ்ட் அணியில் புதிதாக தமிழக வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். விஜய் ஷங்கர் என்ற அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் இலங்கைக்கு எதிராக நடக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால் ஒருமுறை கூட களத்தில் இறங்கவில்லை. சில சமயம் பீல்டிங் செய்ய மட்டும் களம் இறங்கினார்.
வித்தியாசமான வேலை
இந்த நிலையில் அவரை இந்திய கோச் மிகவும் வித்தியாசமான வேலை ஒன்றிற்காக பயன்படுத்தி இருக்கிறார். அதன்படி அவர் ரவி சாஸ்திரியிடம் இருந்து இந்திய கேப்டனுக்கு முக்கிய தகவல்களை அளித்து வருகிறார். ஒவ்வொரு ஓவர் முடியும் போதும் இவர் கோஹ்லியிடம் ரவி சாஸ்திரி கூறியதை சென்று சொல்கிறார். அதே போல பீல்டிங் இறங்கும் போது கோஹ்லிக்கு முக்கிய தகவல்கள் கூறுகிறார். இவர் கூறும் வரிசையிலேயே பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
விஜய் எஸ்எம்எஸ் சர்விஸ்
இந்த நிலையில் விஜயின் இந்த செயலை பலர் பாராட்டி உள்ளனர். போட்டியில் இறங்கவில்லை என்றாலும் கவலை இல்லாமல் பெருந்தன்மையாக செயல்படுவதாக கூறியுள்ளனர். அதில் "விஜய் ஷங்கர் நல்ல சேவை செய்கிறார். எஸ்எம்எஸ் சர்விசுக்கு புதிதாக 'ஷங்கர் மெசேஜ் சர்விஸ்' என்று விளக்கம் கொடுக்கலாம்'' என்று கூறியுள்ளார்.
|
புரிந்து கொள்ள முடியவில்லை
இந்த நிலையில் இந்திய தேர்வு வாரியத்திற்கு எதிராகவும் சிலர் பேசியுள்ளனர். இவர் "இந்திய தேர்வு வாரியத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒருநாள் வீரரை அணியில் எடுக்கிறார்கள், ஒருநாள் உட்கார வைக்கிறார்கள் . எதையும் புரிந்து கொள்ளவே முடியவில்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். சில சமயம் மட்டுமே பீல்டிங் இறங்கிய விஜய் ஷங்கரின் துடிப்பு இந்த போட்டியில் பல முறை பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.