ரசிகன்
இந்நிலையில் நிருபர்களுக்கு கோஹ்லி அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் நீண்ட காலமாக ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகனாகும். அவருடன் ஒரே திரையை பகிரும் வாய்ப்பு கிடைத்துள்ளதை பெருமையாக நினைக்கிறேன்.
ரிலாக்ஸ்
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் நான் இடம்பெறவில்லை. சில நேரங்களில் விளையாட்டை விட்டு ஒதுங்கியிருந்து, ரிலாக்ஸ் செய்வதும் நன்றாகத்தான் இருக்கிறது. அதைத்தான் தற்போது அனுபவித்து வருகிறேன்.
பின்பு பார்க்கலாமே
இந்திய அணி 5 பவுலர்களை கொண்டு ஆட வேண்டுமா, நான்குபேரே போதுமா என்பது குறித்தெல்லாம் இப்போது நான் யோசிக்கவில்லை. மீண்டும் அணிக்கு திரும்பிய பிறகுதான் அதில் கவனம் செலுத்த உள்ளேன்.
120 சதவீதம்
நான் எப்போதுமே 120 சதவீதம் அர்ப்பணிப்போடுதான் கிரிக்கெட் ஆடுகிறேன். அதனால்தான் என்னால் தொடர்ச்சியாக சிறப்பாக பேட் செய்ய முடிகிறது. அதேநேரம், வெற்றி, தோல்வி எனது கையில் கிடையாது. நான் முழு அளவில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்துகிறேன். இவ்வாறு விராட் கோஹ்லி தெரிவித்தார்.