கோல்கத்தா: ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனலுக்கு முதல் முறையாக விதர்பா அணி முன்னேறியுள்ளது. பரபரப்பாக நடந்த அரை இறுதியில் கர்நாடகாவை, 5 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா வென்றது.
முதல்தர போட்டியான ரஞ்சிக் கோப்பை கிரி்க்கெட் போட்டி, 1934 முதல் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 21 மாநிலங்கள் உள்பட, 28 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.