3வது போட்டி
இதனையடுத்து இந்தியாவுக்கு வாழ்வா? சாவா? கட்டமான 2வது ஒருநாள் போட்டி நாளை ஹேமில்டனில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்த போதும் பவுலிங் சொதப்பியது. வில்லியம்சன் - டாம் லாதமின் பார்ட்னர்ஷிப்பை கடைசி வரை பிரிக்கவே முடியவில்லை.
என்ன ஆனது?
எனவே 2வது போட்டியிலாவது தீபக் சஹார் வருவாரா என்று கேட்டாலும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஏன் தான் தீபக் சஹார் ஒதுக்கப்படுகிறார் என்ற கேள்விக்கு தகவல் வெளியாகியுள்ளது. அணியில் சேர்க்கப்பட்டாலும் தீபக் சஹாருக்கு இன்னும் காயம் சரியாகவே இல்லை. காலில் இன்னும் காய பாதிப்பு இருப்பதால் 100% குணமடையவில்லை. அவரை அவசரப்படுத்தி காயத்தை பெரிதாக்கவில்லை என அணி நிர்வாக கூறியுள்ளது.
ரசிகர்களின் கோபம்
காயத்தில் இருக்கும் ஒரு வீரரை பின்னர் எதற்காக அணியில் சேர்த்துள்ளீர்கள், இக்கட்டான சூழல் வரும்போதும் ஒரு நல்ல பவுலரை பயன்படுத்த முடியவில்லையே? என ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சீனியர் வீரரான புவனேஷ்வர் குமாரும் இந்த தொடரில் இல்லை என்பதால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
காயம் எப்படி ஏற்பட்டது
இந்தாண்டின் தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸுடன் நடந்த டி20 போட்டியின் போது தீபக் சஹாருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்தே அவர் விலகினார். அதன்பின்னர் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கடைசி நேரத்தில் மீண்டும் காயத்தின் தன்மை பெரிதாகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.