
பினிஷிங்
தினேஷ் கார்த்திக்குக்கு முன்பே பினிஷிங் மன்னனாக வலம் வருவது டோணிதான். ஒருநாள் போட்டி மட்டுமில்லாமல் டெஸ்ட் போட்டிகளிலும் இவர்தான் பினிஷிங் கிங். ஐபிஎல் போட்டியில் கடந்த வருடங்களில் கடைசி ஓவரில் டோணி ஆடியதை யாராலும் மறக்க முடியாது. 2011 உலகக் கோப்பை இறுதி போட்டியில் டோணி ஆடிய ருத்ர தாண்டவம் யாரால் மறக்க முடியும்.
யார் பெரியவர்
ஆனாலும் டோணி பெரியவரா, தினேஷ் கார்த்திக் பெரியவரா என்று பலரும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சிலர் தினேஷ் கார்த்திக்தான் சிறந்த கீப்பர், பினிஷர் என்றுள்ளார். இவர், ''தினேஷ் கார்த்திக் இப்போது ஆடியது போல டோணி எப்போதுமே ஆடியது இல்லை'' என்று தினேஷுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
டோணிக்கு அடுத்து
இவர் ''டோணிக்கு அடுத்துதான் தினேஷ் கார்த்திக் சிறந்த பினிஷர். இப்போது அவர் கொல்கத்தா அணியின் கேப்டனாகிவிட்டார்'' என்று டோணிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
தினேஷ் என்ன சொல்கிறார்
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். அதில் ''கடைசி நேரத்தில் அமைதியாக இருக்க டோணியிடம் கற்றுக்கொண்டேன். போட்டியை எப்படி முடிக்க வேண்டும் என்பதை டோணி, கோஹ்லி, ரெய்னா ஆகியோரிடம் கற்றுக் கொண்டேன். அவர்கள்தான் எனக்கு ரோல்மாடல்'' என்றுள்ளார்.

அவரே
தற்போது டோணிக்கு 37 வயது ஆகிறது. தினேஷ் கார்த்திக்குக்கு 32 வயதுதான் ஆகிறது. இதனால் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் கீப்பராக கூடிய சீக்கிரத்தில் வலம் வருவார் என்று கூறப்படுகிறது. அவரே டோணிதான் எனக்கு ரோல்மாடல் என்று கூறி பிரச்சனையை முடித்து வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications












