
சமன், சாம்பியன்
சூப்பர் ஓவரும் சமனில் முடிந்த நிலையில், அதிக பவுண்டரிகள் அடித்ததால், இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது. இது நியூசிலாந்து வீரர்களுக்கு பெருத்த மனவேதனையை ஏற்படுத்தியது.
வாழ்வின் மோசமான நாள்
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறி இருப்பதாவது: உலக கோப்பை இறுதி போட்டி நடந்து முடிந்ததை நம்ப முடியவில்லை. எனது கிரிக்கெட் வாழ்வில் ஏற்பட்ட சிறந்த மோசமான நாள் அது தான். எனினும் நியூசிலாந்தில் இடம் பெற்று ஆடியதை, பெரிய கவுரவமாக நான் பார்க்கிறேன்.
அனைவருக்கும் நன்றி
எனது விளையாட்டை ஊக்கப்படுத்தி, பல தருணங்களில் தொடர்ந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. பல வித்தியாசமான உணர்ச்சிகள், முக்கியமாக நியூசிலாந்தை பிரதிநிதிப் படுத்துவதற்கும், பெரிய குழுவினருடன் விளையாடியதையும் நினைத்து பெருமிதமாக உள்ளது.

விரும்புவது இதுதான்
எனது நல்ல தருணம் மற்றும் மோசமான நாள் இரண்டிலும், ஆதரவு தரும் இருவர் என்னோடு வருவார்கள். எனது மகளையும், மனைவியையும், உலகில் வேறு எந்த விஷயத்தையும் விட அதிகம் விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மறக்க முடியாத ஒன்று
2015ம் ஆண்டு உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த குப்தில், 2019 உலக கோப்பை தொடரில் சாதிக்க வில்லை. ஆனால், அவரது சிறப்பான பீல்டிங் பெரிதாக பேசப்பட்டது. அரையிறுதி போட்டியில் தோனியை ரன் அவுட் செய்ததால், இந்தியா தோல்வியை தழுவியதை யாரும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.


Click it and Unblock the Notifications











