பாராட்டு
சூரியகுமார் யாதவ் , ஜிம்பாப்வே வீரர்கள் வீசிய யாக்கர் லென்த் பந்தை கூட அபாரமாக சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற பெயரை மீண்டும் இன்று நிலை நிறுத்தினார் சூரியகுமார் யாதவ். இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரைக் எர்வீன், சூரியக்குமார் யாதவை வெகுவாக பாராட்டினார்.
சிறப்பான ஆட்டம்
எங்களுடைய திட்டத்தை நாங்கள் மாற்றி இருக்க வேண்டும். சூரியகுமார் யாதவ் ஆட்டத்தில் இறுதிக்கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். ரீச்சி வீசிய ஓயிடு யாக்கர்களை சூரியகுமார் யாதவ் ஆடிய விதம் அபாரமாக இருந்தது. நாங்கள் பந்தின் வேகத்தை குறைத்து வீசியிருக்க வேண்டும். எனினும் அனைத்து சிறப்புகளும் சூரிய குமாருக்கே சேரும்.
தலைகீழ் மாற்றி விட்டார்
களத்திற்கு வந்து ஆட்டத்தையே தலைகீழ் மாற்றி விட்டார். இந்தத் தொடரில் நாங்கள் களம் இறங்கும் போது எங்களுடைய பேட்டிங்கில் சில நல்ல விஷயங்கள் இருந்தது. இந்தத் தொடரில் பெரும்பாலும் நாங்கள் அச்சமின்றி விளையாடினும், கடைசி இரண்டு ஆட்டத்தில் நாங்கள் கொஞ்சம் பதற்றம் அடைந்தோம் என நினைக்கிறேன். பந்து நன்றாக ஸ்விங் ஆனதால் ஏனோ தானோ என்று விளையாட முடியாது.
கடுமையாக போராடினோம்
அப்படி செய்தால் பேட்டிங்கில் ஆட்டம் இழக்க நேரிடும். நீங்கள் யோசித்து ஷாட்களை தேர்வு செய்து விளையாட வேண்டும். நாங்கள் திட்டமிட்டபடி கடைசி இரண்டு போட்டிகளில் முடிவு எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் சூப்பர் 12 சுற்றில் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம் என நினைக்கிறேன். அதனை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு அணியை மேலும் கட்டமைக்க வேண்டும். எங்களுடைய ஃபில்டிங் சிறப்பாக அமைந்தது. வீரர்கள் கேட்ச்களை எல்லாம் சிறப்பாக பிடித்தனர். உலகக் கோப்பையில் எங்கள் அணி வீரர்கள் கடுமையாக போராடினார்கள் என்று அவர் கூறினார்.