கோல்கட்டா: கேப்டன் கூல் டோணிக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டதை, அவருடைய சென்னையின் எப்சி அணி, ஏடிகே அணிக்கு எதிராக வெற்றி பெற்று கொண்டாடினர்.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசன் நடந்து வருகிறது. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி, நேற்று நடந்த ஆட்டத்தில் கோல்கட்டாவைச் சேர்ந்த ஏடிகே அணியுடன் மோதியது.