2வது நிமிடத்திலேயே கோல்
ஆனால், பெங்களூரு எப்சி 3-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே போய்தாங்க் ஹோகிப் கோலடித்து சென்னையின் எப்சியை வெறுப்பேத்தினார். 33வது நிமிடத்தில் பிரான்சிஸ் பெர்னான்டஸ் கோலடித்து, சென்னையின் எப்சிக்கு சமநிலையை உருவாக்கினார்.
வேகமெடுத்த ஆட்டம்
மிகவும் பரபரப்பாக ஆட்டம் சென்று கொண்டிருந்த நிலையில், மிகு 63வது நிமிடத்தில் கோலடிக்க, பெங்களூரு எப்சி 2-1 என்று முன்னிலை பெற்றது. சபாஷ் சரியான போட்டி என்று சொல்லும் அளவுக்கு ஆட்டம் அதன்பிறகு வேகமெடுத்தது.
வாய்ப்பு போச்சு
சென்னையின் எப்சிக்கு கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தும், வட போச்சே கணக்காக அமைந்தது. ஜிஜோ லால்பெக்குலா அடித்த பந்தை பெங்களூரு கோல் கீப்பர் தடுத்து நிறுத்த, டிரா செய்யும் வாய்ப்பை சென்னையின் எப்சி இழந்தது.
10 பேருடன் விளையாடியது
எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றியதுபோல், 71வது நிமிடத்தில் ஹென்றிக் செரினோவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 10 பேருடன் விளையாட நேர்ந்ததுடன், கூடுதல் நேரமும் கிடைத்தது.
சேத்ரிக்கு 9வது கோல்
மிகச் சிறந்த பினிஷரான கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணியின் அணியான சென்னையின் எப்சி கடைசி நேரத்தில் எப்படி பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கேப்டன் சுனில் சேத்ரி, இந்த சீசனில் 9வது கோலை அடிக்க, பெங்களூரு 3-1 என்ற கணக்கில் அபாரமாக வென்றது.
7 புள்ளிகள் வித்தியாசம்
பெங்களூரு எப்சி 14 போட்டிகளில் 10 வெற்றிகள், 4 தோல்வியுடன் 30 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து இருக்கிறது. சென்னையின் எப்சி 13 போட்டிகளில் 7 வெற்றி, 2 டிரா, 4 தோல்விகளுடன், 23 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. வரும் 11ம் தேதி டெல்லி டைனமோஸ் அணியுடன் சென்னையின் எப்சி மோத உள்ளது.